Saambal Nira Kanavugal Mazhai
From Bayamariya Brammai · 2015
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| En saambal nira kanavugalukkul |
| Nee evaaru ut-pugundhaai? |
| Ethanai murai kalaippinum |
| Oyaadhu marana valaigal pinni kondirukum |
| Silandhiyin kaathirupil |
| Sikki konda iraiyin parithavippai kandu |
| Nee nadunga.. |
| Naano adhan melliya valaiyin meedhu |
| Padarndhodum nerthiyaana |
| Vadivangalukkul en aanmaavai pinaithu konden |
| Male |
| En thadaagathin oram |
| Thaagam theerka varubavargalai |
| Mella ul vaangi kolgiren |
| Enjuvadho endhan nesangalai ninaivu paduthum |
| Neer kumizhigalae |
| Udaindhu vidum ena therindhum |
| Meendum meendum uruvaagum |
| Meendum meendum uruvaagum |
| Meendum meendum uruvaagum |
| Male |
| Idho en saambal nira kanavugalakkul |
| Udhirangal uraiya |
| Sadhaa vaarthaigal padaithu kondirukiren |
| Pakkangal thorum vazhindhodum ranam |
| Anaithum aayatham |
| Mella thirai vilaga |
| Meendum oru kadhai pirakkum |
என் சாம்பல் நிற கனவுகளுக்குள்
நீ எவ்வாறு உட்புகுந்தாய்?
எத்தனை முறை கலைப்பினும்
ஓயாது மரண வலைகள் பின்னிக் கொண்டிருக்கும்
சிலந்தியின் காத்திருப்பில்
சிக்கி கொண்ட இரையின் பரிதவிப்பை கண்டு
நீ நடுங்க..
நானோ அதன் மெல்லிய வலையின் மீது
படர்ந்து ஓடும் நேர்த்தியான வடிவங்களுக்குள்
என் ஆன்மாவைப் பிணைத்துக் கொண்டேன்.
என் தடாகத்தின் ஓரம்
தாகம் தீர்க்க வருபவர்களை
மெல்ல உள் வாங்கி கொள்கிறேன்.
எஞ்சுவதோ எந்தன் நெசங்களை நினைவு படுத்தும்
நீர் குமிழிகளே .
உடைந்து விடும் என தெரிந்தும்
மீண்டும் மீண்டும் உருவாகும்.
மீண்டும் மீண்டும் உருவாகும்
மீண்டும் மீண்டும் உருவாகும்.
இதோ என் சாம்பல் நிற கனவுக்குள்
உதிரங்கள் உறைய
சதா வார்த்தைகள் படைத்து கொண்டிருக்கிறேன்.
பக்கங்கள் தோறும் வழிந்தோடும் ரணம்
அனைத்தும் ஆயத்தம்
மெல்ல திரை விலக
மீண்டும் ஒரு கதை பிறக்கும்.
Keep listening
More from Bayamariya Brammai
No related songs found yet.