Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Amma Sonna

From Solla Marandha Kadhai · 2002

Lyricist
Isaignani Ilayaraja
Singers
Ilayaraja, K. J. Yesudas
Music director
Ilayaraja
Details
Solla Marandha Kadhai2002

Lyrics & meaning

Tamil lyrics

ஆண் 1 :

சின்ன உயிரின் உடல்வளர

மடி தந்து

கண்ணின் மணிபோல்

காக்கத் தனைத்தந்து

அன்பின் உருவாய்

மண்ணில் இருப்பது யார்

அம்மா...அம்மா...

ஆண் 1 :

அம்மா சொன்ன ஆரிரரோ

சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி

ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்

மாஞ்செடி பூந்தேனடி

ஆண் 1 :

அம்மா சொன்ன ஆரிரரோ

சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி

ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்

மாஞ்செடி பூந்தேனடி

ஆண் 1 :

வீணை என்ன குழலும் என்ன

கொஞ்சும் பிள்ளை முன்னே

தேனும் என்ன பாகும் என்ன

அன்னை அன்பின் முன்னே ஹோய்...

ஆண் 1 :

அம்மா சொன்ன ஆரிரரோ

சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி

ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்

மாஞ்செடி பூந்தேனடி

ஆண் 1 :

காதல் சுமை கணவன் சுமை

குடும்பச்சுமை தாங்குவாள்

காலமெல்லாம் கன்னியர்க்கு

ஓய்வு உண்டோ...

சுமைகளெல்லாம் சுமப்பதிலே

சுகமிருக்கும் பெண்ணுக்கு

சுகம் கொடுக்கும் பிள்ளைச்சுமை

சொல்லிடவோ...

ஆண் 1 :

கைபிடித்த கணவன் கால்கள் பிடிப்பாள்

கண்மணிக்கு இமை போல காவல் இருப்பாள்

அன்னையென ஆனாள்

தன் பிள்ளைக்கென குழைவாள்

ஆண் 1 :

அன்னையென ஆனாள்

தன் பிள்ளைக்கென குழைவாள்

மண்ணில் உண்மையிலே உயர்ந்த

ஜென்மம் பெண் ஜென்மமே

ஆண் 1 :

அம்மா சொன்ன ஆரிரரோ

சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி

ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்

மாஞ்செடி பூந்தேனடி

ஆண் 2 :

காற்றினிலே கலந்துவரும்

கார் குயிலின் கானம்போல்

காதினிலே கேட்கும் பிள்ளைக் கனிமொழி..

தூண்டிலிட்டு இழுக்கும் அந்த

தூய நிலா ஒளியைப்போல்

பேச்சு இன்றிப் பிடித்திழுக்கும் வண்ண விழி...

ஆண் 2 :

சிதறி வரும் சிரிப்பில்

முத்துத் தெறிக்கும்..

சிரிக்கும் அந்த வெள்ளி மீன்

உள்ளம் பறிக்கும்

ஏங்குதம்மா நெஞ்சம்....

ஏந்திக் கொண்டு பாட

ஆண் 2 :

ஏங்குதம்மா நெஞ்சம்....

ஏந்திக் கொண்டு பாட

கையில் என்று வரும்

பிள்ளைநிலா நீ கூறடி....

ஆண் 2 :

அம்மா சொன்ன ஆரிரரோ

சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி

ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்

மாஞ்செடி பூந்தேனடி

ஆண் 2 :

வீணை என்ன குழலும் என்ன

கொஞ்சும் பிள்ளை முன்னே

தேனும் என்ன பாகும் என்ன

அன்னை அன்பின் முன்னே ஹோய்...

ஆண் 2 :

அம்மா சொன்ன ஆரிரரோ

சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி

ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்

மாஞ்செடி பூந்தேனடி

Keep listening

More from Solla Marandha Kadhai