Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Pazhangala Tamizharin

From Manimekalai · 1959

Lyricist
A. Maruthakasi
Singers
M. L. Vasanthakumari, N. L. Ganasaraswathi
Music director
G. Ramanathan
Details
Manimekalai1959

Lyrics & meaning

Tamil lyrics

பெண்கள் :

பழங்காலத் தமிழரின் வாழ்க்கை நிலை

பழங்காலத் தமிழரின் வாழ்க்கை நிலை

தன்னை படம் பிடித்தே காட்டும் மணிமேகலை

பழங்காலத் தமிழரின் வாழ்க்கை நிலை

தன்னை படம் பிடித்தே காட்டும் மணிமேகலை

பெண்கள் :

வளமான செந்தமிழ் இலக்கியச்சோலை

ஹா..ஆஆஆ..ஹா....

ஹா ஆஅஆஆஆ ...

பெண்கள் :

வளமான செந்தமிழ் இலக்கியச்சோலை

வழங்கிய வாடாத மலர்மாலை

வழங்கிய வாடாத மலர்மாலை

பழங்காலத் தமிழரின் வாழ்க்கை நிலை

தன்னை படம் பிடித்தே காட்டும் மணிமேகலை

பெண்கள் :

அமுதசுரபி என்னும் அட்சய பாத்தரம்

அதனாலே பசி தீர்த்த மங்கையின் சரித்தரம்

அமுதசுரபி என்னும் அட்சய பாத்தரம்

அதனாலே பசி தீர்த்த மங்கையின் சரித்தரம்

சமுதாயம் உயர்ந்திட வழி காட்டும் சித்திரம்

சமுதாயம் உயர்ந்திட வழி காட்டும் சித்திரம்

சங்கத் தமிழ்ப் புலவர் சாத்தனார் கைத்திறம்

வீரம் தவநெறியின் பெருமைதனைக் கூறும்

நலம் சேரும் பெண்கள் குலவீரம்

தவநெறியின் பெருமைதனைக் கூறும்

நலம் சேரும் பெண்கள் குல

மேன்மையும் விளங்கிடவே காவிய எழில்

காணும் மனமும் மிகக் களித்திடவே

மேன்மையும் விளங்கிடவே காவிய எழில்

காணும் மனமும் மிகக் களித்திடவே

பெண்கள் :

அழகு சந்தத் தமிழில் தந்த பெருமை

ஐம்பெருங்காப்பியம் இதன் உரிமை

அழகு சந்தத் தமிழில் தந்த பெருமை

ஐம்பெருங்காப்பியம் இதன் உரிமை

தான தர்ம வாழ்வின் அருமைதனையே

சாற்றிடும் புகழை நாட்டிடும் நமது

பழங்காலத் தமிழரின் வாழ்க்கை நிலை

தன்னை படம் பிடித்தே காட்டும் மணிமேகலை

Keep listening

More from Manimekalai