Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Nenjukkulle Singakkutti

From Pattakkathi Bhairavan · 1979

Lyricist
Kannadasan
Singers
P. Susheela, S. Janaki
Music director
Ilayaraja
Details
Pattakkathi Bhairavan1979

Lyrics & meaning

Tamil lyrics

நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி

நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்

நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி

நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்

நெறமோ செவப்பு

நெனச்சா இனிப்பு

நேத்திக்கு தூக்கமில்ல ஏண்டி

மச்சானோ அத்தானோ

மாயப் பொடி வச்சானோ

தொட்டானோ பட்டானோ

தூது சொல்லி விட்டானோ

நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி

நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்

ஆட விட்டுப் பாத்திருந்தா

காடு நடுங்கும்

அந்தியிலும் சந்தியிலும்

கண்ணு மயங்கும்

கூடு கட்டி வச்சிருக்கேன்

காலம் வரணும்

கொட்டு மேளம் கொட்ட

ஒரு நேரம் வரணும்

கேட்டது கண்டதில்லையே

ஏக்கமும் தாங்கவில்லையே

காதலுக்கு கண்ணு ரெண்டும் எங்கே

காத்திருக்கு பொண்ணு ரெண்டும் இங்கே

நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி

நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்

நெறமோ செவப்பு

நெனச்சா இனிப்பு

நேத்திக்கு தூக்கமில்ல ஏண்டி

நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி

நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்

மாமனுக்கு ஆச வந்தா

கைய கொடடி

மந்திரத்தை சொல்ல விட்டு

காத கொடடி

பேசணும்னு எண்ணம் வந்தா

பேச்சுக் கொடடி

பேசுவதை பேசி விட்டு

மூச்சு விடடி

ராத்திரி அள்ளிக் கொடுப்பான்

சாத்திரம் சொல்லிக் கொடுப்பான்

பக்கத்துல மன்னன் வந்த பின்னே

பாக்கட்டிலே நோட்டடிக்க வேண்டாம்

ஹா ஹா

நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி

நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்

புள்ளியிட்ட மானு

ரெண்டும் துள்ளுதடியோ

பூவுக்குள்ளே தேனிருந்து

பொங்குதடியோ

உள்ளுக்குள்ளே நூறு

கத தோணுதடியோ

உனக்கு மட்டும் சொல்லி

வச்சேன் கேட்டுக்கடியோ

என்னைக்கு

சொந்தம் வருமோ

பொண்ணுக்கு சொர்க்கம் வருமோ

மாலையிட்டு

வாழ்ந்திருப்போம் வாம்மா

மன்மதனை பூஜை செய்யலாமா

நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி

நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்

நெறமோ செவப்பு

நெனச்சா இனிப்பு

நேத்திக்கு தூக்கமில்ல ஏண்டி

மச்சானோ

அத்தானோ

மாயப் பொடி வச்சானோ

தொட்டானோ

பட்டானோ

தூது சொல்லி விட்டானோ

நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி

நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்

Keep listening

More from Pattakkathi Bhairavan