Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Namo Narasimha Naadha

From Bhakta Prahlada · 1967

Lyricist
Trichy Thiyagarajan
Singers
Balamuralikrishna, P. Susheela, Chorus
Music director
S. Rajeswara Rao
Details
Bhakta Prahlada1967

Lyrics & meaning

Tamil lyrics

ஏ மாதவா முகுந்தா

பாபசம்ஹாரா

திரிலோக ஜகன்மோகனா காரா

மாயவதாரா ஜகன்நாதா

லோகாதிநாதா

மச்சாவதாரத்திலே சோமனைக் கொன்று

வேதங்கள் காத்தனை!

தேவாசுரர் அன்று பாற் கடல் கடைகின்ற காலத்தில்

கூர்மாவதாரம் கொண்டு மந்திரமலை தாங்கி

ஜகன்மோகினியாக உருமாறி

வானமுதை தேவர்க்கு ஊட்டினை!

வராக ரூபம் கொண்டே சிறைப்பட்ட

பூதேவியை மீட்டனை!

அண்டத்தில் அண்டமொடு அணுவுக்குள் அணுவான ஜகதீசனே!

இன்று உன் மகிமை அறியாத அஞ்ஞானிக் கண் தந்து

மெய்யான அமுதூட்டி அடியாரின் குறை தீர்க்க

நரசிங்க அவதாரமாய்

இங்கே அமைய ஆட் கொள்ளவே நீ வந்தாயோ தேவா!

பரந்தாமா ! வைகுண்ட வாசா! வைகுண்ட வாசா!

நமோ நரசிம்மா நமோ பக்தபாலா

அனைவரும் :

நமோ நரசிம்மா நமோ பக்தபாலா

விண்ணும் மண்ணுமே வியந்து அஞ்சிடும்

உக்கிர ரூபமே உடனே மாற்றுவாய்!

அனைவரும் :

விண்ணும் மண்ணுமே வியந்து அஞ்சிடும்

உக்கிர ரூபமே உடனே மாற்றுவாய்!

கருணையான அருள் மழை பொழிந்திடும்

வடிவமாக நீ வந்தே தோன்றுவாய்!

நமோ நரசிம்மா நமோ பக்தபாலா

நமோ நரசிம்மா நமோ பக்தபாலா

நமோ நரசிம்மா நமோ பக்தபாலா

Keep listening

More from Bhakta Prahlada