Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Idho Idho En Nenjile

From Vatathukkul Chadhuram · 1978

Lyricist
Panchu Arunachalam
Singers
S. Janaki, B. S. Sasirekha
Music director
Ilayaraja
Details
Vatathukkul Chadhuram1978

Lyrics & meaning

Tamil lyrics

பெண் 1 :

இதோ இதோ என் நெஞ்சிலே

ஒரே பாடல்

பெண் 2 :

அதோ அதோ என் பாட்டிலே

ஒரே ராகம்

பெண் 1 :

கொடி நீ மலர் நான்

பெண் 2 :

கிளை நீ கனி நான்

இருவர் :

மனம் போல் வாழ்வோம்

துணை நீ....ஈ.....

இதோ இதோ என் நெஞ்சிலே

ஒரே பாடல்

பெண் 1 :

ஓடுது ரயில் பாரு

மனம் போலவே

பாடுது குயில் அங்கே

தினம் போலவே

பெண் 2 :

மாமரம் பூ பூத்து

விளையாடுது

காடெங்கும் புது வாசம்

பறந்தோடுது

பெண் 1 :

பார்த்தவை எல்லாம்

பரவசம் ஆக

புதுமைகள் காண்போம் எந்நாளுமே

பெண் 2 :

இனி வாழ்வில் நீதான்

என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே

ஒரே பாடல்

அதோ அதோ என் பாட்டிலே

ஒரே ராகம்

பெண் 1 :

தீபத்தின் ஒளியாக

ஒரு பாதி நான்

தேன் கொண்ட மலராக

மறு பாதி நீ

பெண் 2 :

காற்றினில் ஒலியாக

வருவேனடி

கனவுக்குள் நினைவாக

வருவாயடி

பெண் 1 :

நிலவுக்கு வானம்

நீருக்கு மேகம்

கொடிக்கொரு கிளைபோல்

துணை நீயம்மா

இனி வாழ்வில் நீதான்

என் சொந்தமே....

பெண் 2 :

இதோ இதோ என் நெஞ்சிலே

ஒரே பாடல்

அதோ அதோ என் பாட்டிலே

ஒரே ராகம்

பெண் 2 :

ஓடமும் நீரின்றி

ஓடாதம்மா

நீ சொல்லும் வழி நானே

வருவேனம்மா

பெண் 1 :

தோழமை உறவுக்கு

ஈடேதம்மா

நீ சொன்ன மொழி நானே

கேட்பேனம்மா

பெண் 2 :

உனக்கென நானும்

எனக்கென நீயும்

உலகினில் வாழ்வோம் எந்நாளுமே

இனி வாழ்வில் நீதான்

என் சொந்தமே

பெண் 1 :

இதோ இதோ என் நெஞ்சிலே

ஒரே பாடல்

அதோ அதோ என் பாட்டிலே

ஒரே ராகம்

பெண் 1 :

ராமனின் குகன் ஆக

உனை பார்க்கிறேன்

மாலதி அனுவாக

நான் வாழ்கிறேன்

பெண் 2 :

இரு மனம்

அன்பாலே ஒன்றானது

நேசத்திலே உள்ளம்

பண்பாடுது

பெண் 1 :

பறவைகள் போலே

பறந்திடுவோம்

மகிழ்வுடன் வாழ்வோம்

எந்நாளுமே

இனி வாழ்வில் நீதான்

என் சொந்தமே

பெண் 1 :

இதோ இதோ என் நெஞ்சிலே

ஒரே பாடல்

பெண் 2 :

அதோ அதோ என் பாட்டிலே

ஒரே ராகம்

பெண் 1 :

கொடி நீ மலர் நான்

பெண் 2 :

கிளை நீ கனி நான்

இருவர் :

மனம் போல் வாழ்வோம்

துணை நீ....ஈ.....

இதோ இதோ என் நெஞ்சிலே

ஒரே பாடல்

Keep listening

More from Vatathukkul Chadhuram